மார்ச் 02, 2022

என் உயிரே ....


கவிதை வரிகளாய்
உன் வார்த்தைகள் ......
அர்த்தம் தேடியே தினம்
அலைகின்றேன் நான் .......

புதிர் போடும்
உன் புன்னகைக்கு
விடை தேடியே
விடியலைக்  கூட  விரும்பாமல் 
விழுந்து  கிடக்கின்றேன்  நான் .......

விருப்பம்  அறிந்தும் 
விலகி செல்கின்றாய் .....
மௌனமாய் 
எட்டாத தூரத்தில் ......
விடை கிடைக்கும் நாளில் தான் 
என் வானில் விடியல் ......

காத்திருக்கின்றேன் 
தூணென  உனைத் தாங்க .....
தூக்கி  எறியாதே 
காகிதமாய்  எனை .......