மார்ச் 11, 2011

ஆசை


யாருக்கும்  தெரியாமல்
உன்  காதலியாய்
 கைகோர்த்து
ஊர் சுற்ற
ஆசையில்லை  எனக்கு ............
ஊருக்கும் , உலகுக்கும்
தெரிந்த  படி
உன்  மனைவியாய்
கரம் பிடித்து
ஊர்வலம்   செல்லத்  தான்
ஆசை  எனக்கு ...............

யாருக்கும்  தெரியாமல்
தொலைபேசியில்
மணிக்கணக்காய்  பேச
ஆசையில்லை  எனக்கு ..............
மனைவியாய்
உன்னருகில்   அமர்ந்து
முகம்  பார்த்து
பேசத்  தான்
ஆசை  எனக்கு ................

யாருக்கும்  தெரியாமல்
உன்  புகைப்படம்   பார்த்து
பொழுதுகள்   விடிய
ஆசையில்லை  எனக்கு ..............
தினம்  உன்  முகம்  பார்த்து
பொழுதுகள்
விடியத்  தான்
ஆசை  எனக்கு ................

மார்ச் 08, 2011

புன்னகைப் பூவே

அன்பே
நீ   புன்னகைப்பதால்
மலர்வது
உன்   முகம்   என்றாலும்
நானும்   புதிதாய்   மலர்கின்றேன்
தினமும்
உன்னைப்   பார்த்து   ரசிப்பதால் .............

என்னைச்    சித்திரவதை   செய்யும்
உன்   சிரிப்பை   மட்டும்
என்றுமே   நிறுத்தி   விடாதே
ஏனென்றால்
உன்   கண்ணீர்த்   துளி
என்னை   எரித்து   விடும்
நிச்சயமாக ................