அன்பை புதைத்து
ஆத்திரத்தை தூண்டி விடும் ....
அழகான உறவுகளை
அடியோடு பிரித்து விடும் ....
ஆயிரம் பொய் திரைகள் போர்த்தி
உண்மையெனும் சூரியனை
மறைக்க நினைத்தாலும்
மறைக்க முடியாது ....
சுட்டெரித்து விடும்
நிச்சயம் ஒரு நாள் ....
உடைந்த நம்பிக்கையை
ஒட்ட வைத்தாலும்
மறக்க முடியாது
மனம் உடைந்த நாட்களை .....
ஆற்ற முடியாது
அது தந்த காயங்களை .......
நல்லவர் போல் எள்ளி நகையாடி
முதுகில் குத்தும்
நன்றி இல்லா
நயவஞ்சக மனிதர்களிடம்
விலகியே இருங்கள் ......
துரோகம் என்ற கல்லினால்
நம்பிக்கை எனும் வாழ்க்கை கண்ணாடியை
உடைத்து விளையாடும்
உணர்ச்சியற்ற மனிதர்களிடம்
எச்சரிக்கையாய் இருங்கள் ........
துணிச்சலோடு
தூக்கி எறியுங்கள்
துரோகிகளை ......
தன்னம்பிக்கையோடு
எதிர் கொள்ளுங்கள்
தாங்க முடியா தருணங்களையும் ......