செப்டம்பர் 22, 2009

கவிதை பூக்கள்


காகிதத்  தோட்டத்தில்
வார்த்தைகள்  முளைத்தால்   தான்
கவிதை  பூக்கள்  பூக்கும் .....

ஆயிரமாயிரம்   கவிதை  பூக்கள்
வாசனை   மட்டும்   இராது ....
ஆனால் அதற்குள்
காதல்   இருக்கும் ......
இனிமை   இருக்கும் .......
சோகம்   இருக்கும் .....
விவேகம்   இருக்கும் ......

அற்புதமான கவிதை பூக்களை
வளர்ப்பதற்காகத்   தான்
எனது   காகிதத்   தோட்டம்
காத்து  கிடக்கின்றது .........

செப்டம்பர் 04, 2009

கனவுகள்


கடந்த   கால   கனவுகளை   எண்ணி
கண்ணீர்   வடிக்காதே.........
நிகழ்கால   கனவுகளை   மட்டும்
நினைத்துக்   கொண்டேயிரு
நிச்சயம்   வெற்றி
உன்   பக்கம்   தான் .........

உன்னைக்    கரை   சேர்க்காத
வெறும்   கற்பனைக்   கனவுகளை
தேடித்   தேடியே
உன்   நிகழ்கால   நிஜங்களை
தொலைத்து   விடாதே ...........

விழித்திரு
வசந்தம்
உன்   வாசல்   வரும்
நிச்சயமாய்..............