தாயின் மடி தேடி ஓடும்
தேடல் இனிது......
நடக்கும் போதோ
தந்தையின் கை விரல் பிடிக்க
எட்டி நடை வைத்து ஓடும்
தேடல் இனிது......
பள்ளி படிப்பின் போதோ
இனிக்காத கல்வியையும்
இனிக்கச் செய்யும்
ஆசிரியர் , நண்பர்களின்
முகம் தேடி ஓடும்
தேடல் இனிது......
கல்லூரி படிப்பின் போதோ
ஆனந்தமாய் ஆட்டங்கள் என்றாலும்
வாழ்க்கைக்கான பாடத்தை
விருப்பத்தோடு புரிந்து தேடும்
தேடல் இனிது ......
வேலை தேடும் போதோ
கனவுகளை தள்ளி வைத்து
நிஜங்களை தேடி ஓடும்
தேடல் இனிது......
வாழ்க்கைத் துணையை தேடும் போதோ
ஆயிரம் கனவுகளோடு
கைபிடிக்க காத்திருக்கும்
புது உறவின் புரிதல்களை தேடும்
தேடல் இனிது......
திருமண வாழ்வின் போதோ
எதிர்பார்ப்புகள்
நிறைந்தாலும் , சிதைந்தாலும்
பிள்ளையெனும் பிடிப்பொன்று
பிடித்திழுக்க
தனை மறந்து
அதன் பின்னே ஓடும்
தேடல் இனிது ......
நிம்மதியை
வெளியில் தேடி ஓடாமல்
உள்ளுக்குள் தேடி ஓடும்
தேடலோ
என்றுமே இனிது .......