ஏப்ரல் 08, 2020

வாழ்க்கை ஒரு வரம்

எதிலும்  குறை காணும்  மனிதர்களுக்கு
என்றும்  நிறைவே  இல்லை ..........
குறைகளை  பட்டியலிட்டு
வீணடிக்காதே
மீட்க  முடியாத  மணித்துளிகளை ...........

குழந்தையின்  மனதில்
கோபம் , வெறுப்பு
பொறாமை , பேராசை
வஞ்சகம் , ஏமாற்றுதல்
புறம் பேசுதல்
இவை  ஏதும்  இராது ........
குழந்தை  போல்  இருங்கள்
அன்பு  காட்டுவதில் ..........
அனைவரும்  ஏங்குவது
அன்பிற்கு  மட்டும் தான் ...........

மனிதர்களை  நேசியுங்கள்
மன்னிக்க  கற்று  கொள்ளுங்கள்
மனம்  விட்டு  பாராட்டுங்கள்
வாழ்க்கை  அழகாய்  மாறும்.........
வரமெனும்  வாழ்க்கையில்
சொர்க்கத்தின்  வாசல்கள்
திறக்கப்படும் .நிச்சயமாய் ........

1 கருத்து: