தொலைந்த நாட்களின் பொழுதுகளையும்
சேர்த்து வாழ
காத்திருக்கின்றேன் ........
அடியோடு வெட்டி புதைத்த ஆசைகள்
எட்டி பார்க்குது மெல்ல மெல்ல ......
ஒரு முறை தினம் பார்க்கும் கண்ணாடியை
பல முறை பார்க்கிறேன் இன்று ......
உன் வருகைக்கான நேரம்
நெருங்க நெருங்க
எனக்குள் கேட்பதன்னவோ
வாகன ஒலிகள் மட்டுமே .......
தொட்டு உணர முடியா
கைபேசித்திரையில்
உன் முகம் தேடியே
காத்திருந்த நாட்களோ
கடந்து போய் விடும் இன்றோடு ........
காத்திருக்கின்றேன்
ஆயிரம் உணர்வுகளை
சொல்லாமல் சொல்லும்
உன் விழியின்
தேடலை நோக்கி
வாசலிலே ........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக