உன்னைக் கொல்லும் என்னை
ஏன் கைகளில் வைத்து கொண்டாடுகிறாய் .........
விற்பனைக்கு இங்கு தடை இல்லை என்பதாலோ ?......
உன் உடம்பை உருக்கும் என்னை
ஏன் உருகி உருகி தேடுகிறாய் .........
உன் வலிகளுக்கு மருந்தல்ல நான்
என்னை தூக்கி எறிந்து விடு .........
கரம் பிடித்தவளின் கண்ணீர் துடைக்க
என்னை கை விட்டு விடு .........
உலகமென உன்னைச் சுற்றிச் சுழலும்
உறவுகளின் வார்த்தைகளை மட்டும்
உதறிச் செல்லாதே .........
மாற்றங்கள் உனக்குள் தளிர்விட்டால்
மகிழ்ச்சி பூக்கும்
உன் வீட்டுத் தோட்டத்தில்.........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக