ஜூலை 12, 2021

விதிகள்


சிரித்தாலும் , அழுதாலும் 
சிந்தும்  கண்ணீர்  ஒன்று  தான் ........
சுகமோ , சுமையோ 
தாங்கும்  தோள்கள்  ஒன்று  தான் ..........
வெற்றியோ , தோல்வியோ 
வாழ்க்கை  ஒன்று  தான் .........

திருப்பங்கள்  நிறைந்த 
வாழ்க்கைப்  பாதையில் 
எதையும்  எதிர்கொண்டு 
பயணிக்க  கற்றுக் கொள் ..........
ஏற்க  முடியாத 
வலிகள், ஏமாற்றங்கள் கூட 
கடந்து  போகக்  கூடும் .........

இருக்கும்  ஒரு  வாழ்க்கையை 
இறக்கும்  வரை 
ரசித்து  வாழக்  கற்றுக்கொள் .........
ரசிக்க  கூட  மறக்கலாம் 
ஆனால்  
வெறுத்து மட்டும் 
விடாதே .........

வீழ்ந்தாலும் 
வெல்வதற்கு  போராடு ........
விதியைக்  கூட 
மாற்றி  எழுதலாம் ...........


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக