செடியாய் தளிர்ப்பதில்லை .........
தளிர்த்த செடிகள் எல்லாம்
ஓங்கி மரமாய் வளர்வதுமில்லை .........
வளர்ந்த மரங்கள் எல்லாம்
பல்லாண்டுகள் வாழ்வதும் இல்லை..........
நொடிப் பொழுதினில்
வேரொடு வெட்டியெறிந்து
வீழச் செய்யும் மனிதர்களே
சற்று சிந்தியுங்கள் .........
வீழ்வது இன்று மரங்கள் என்றாலும்
நாளை வீழப்போவது மனிதர்களே.........
உயிர் காக்க ஆக்ஸிஜனையும்
இலவசமாய் வழங்கி
உதவிக்கரம் நீட்டும்
மரங்களின் கைகளை இன்று வெட்டினால்
நாளை கையேந்த வேண்டியிருக்கும்
நீருக்காக .........
மூச்சுக் காற்றிற்காக .........
காத்திடுவோம் காடுகளை .....
விட்டுச் செல்வோம்
பசுமை போர்த்திய பூமியாய் .....
நாளைய தலைமுறையும்
வாழ்வதற்காக............
நாளைய தலைமுறையும்
வாழ்வதற்காக............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக