ஜூன் 20, 2009

எழுத்தாய் என் உணர்வுகள்


என்   கவிதை   வரிகளில்
எழுத்தாய்..........
உன்   நினைவுகள்   புதைந்து   கிடக்கின்றன ...........
எழுத்தாய் ...........
நம்   கனவுகள்   கலைந்து   கிடக்கின்றன...........
நீ    நிச்சயம்   படிப்பாயானால்
என்   எழுத்து   கூட   உயிர்   பெறும்...........

காத்திருகின்றேன்
என்   கவிதைகளில்
உன்   கைவிரல்
படும்
நாளை  எண்ணி ..........

உனக்கென்று
ஓர்   கவிதைப்    புத்தகம்
மூடியே   கிடக்கின்றது.
உனக்காக   மட்டுமே
எழுதப்பட்டது
அது ...........
உன்   இதயம்   திறந்து
மனம்   விட்டுப்  படி ...........
ஏனென்றால்
உள்ளே   எழுத்தாய்
உறங்குவது   என்   இதயம்   அல்லவோ .........
நீ   படித்தால்   மட்டுமே
என்   இதயம்   விழித்துக்  கொள்ளும் ............
இல்லையேல்
மௌனமாய்   அது
மடிந்து   கொண்டே   இருக்கும் .................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக