ஜூன் 26, 2009

என்னை உயிர்ப்பித்தவள்

உன்னை   வரைந்தேன்
ஓவியன்   என்றனர் ........
உன்னை   வர்ணித்தேன்
கவிஞன்   என்றனர் ........
உன்னை   நினைத்து
உருகி   பாடினேன்
பாடகன்   என்றனர் ........
உன்னைச்   சிலையாய்
செதுக்கினேன்
சிற்பி   என்றனர் ........

என்னை
ஓவியனாய்
கவிஞனாய்
பாடகனாய்
சிற்பியாய்
நீ   மாற்றி   விட்டாய் .......

என் படைப்புகளை
உலகுக்கு    உணர்த்தவோ
பிரம்மன்   உன்னை  படைத்தானோ ?........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக