ஜூலை 21, 2009

எல்லாம் உனக்காக


என்   இதயத்தைக்   கூட
மௌனமாய்
துடிக்கச்   சொன்னேன்
உள்ளே   நீ   உறங்கும்   போது...........

என்   இரத்தத்தைக்   கூட
என்   இதயக்   கரையை
இதமாய்
கடந்து   செல்   என்றேன்
உன்   பெயரை   மட்டும்
அழிக்காதவாறு............

கண்களென்னும்   திரையரங்கில்
தினமும்   திரைப்படமாய்
உன்   நிழற்படம்   மட்டும்   தான்
அரங்கேற   வேண்டும்   என்று
என்   கண்களுக்கு   கூட
கட்டளை   விடுத்தேன்
எல்லாம்   உனக்காக   தானடி .............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக