ஜூலை 23, 2009

உலகம் முடியும் வரை ஓர் யுத்தம்


மௌனமாய்
ஓர்   யுத்தம்
இரு   இதயங்களுக்கு
இடையில் .........
வெளியே
அமைதி   என்றாலும்
உள்ளுக்குள்ளோ
எங்களது
எதிர்காலக்   கனவுகள்
எரிமலையாய்
வெடித்து  சிதறுகின்றன ...........

எங்கள் இதயக்  கடலிலோ
இடைவிடாமல்
சுனாமி   அலையின்
தாக்குதல் ............
உள்ளுக்குள்ளோ
ஆயிரம்   முனங்கல்   சப்தங்கள்
யாருக்கும்   கேட்காதவாறு
ஒலித்து   கொண்டே   இருக்கின்றது
மிகவும்   மௌனமாய் ..........

இந்த   மௌன  யுத்தத்தில்
தோல்வியென்றால்
இருவரும்   வீழ்வோம்..........
வெற்றியென்றால்
இருவரும்  வாழ்வோம்...........

உலகம்   முடியும்  வரை
இப்படிப்பட்ட   மௌன  யுத்தங்கள்
தொடர்ந்து   கொண்டே   தான்   இருக்கும் .............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக