வீடெனும் உலகத்திற்குள் கை கோர்க்க விடுவதில்லை
கைபேசி .........
ஒருவர் தூங்க
பலரை தட்டி எழுப்பும் ஒலி
குறட்டை .......
உயிர்த் துடிப்போடு
கண்களை மூடி
இருண்ட உலகத்திற்குள்
தினம் அழைத்துச் செல்கின்றது
தூக்கம் .......
விரல் பட்டால் வாடி விடுவேன்
எட்டி நின்றே எனை ரசித்திடு
ரோஜா ......
ஓடும் வரை மதிப்புண்டு
ஓய்ந்து நின்றால் மதிப்பில்லை
கடிகாரத்திற்கும் , மனிதனுக்கும் .......
அழிக்கின்றாய் காடுகளை
தகர்க்கின்றாய் மலைகளை
உறிஞ்சுகின்றாய் நதிகளை
எரித்திடுவேன் என்பதால்
எனை மட்டும் தொட அஞ்சுகின்றாய்
சூரியன் ........